001. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!


தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம்.

இரண்டு அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும், தந்தையை, தாயை, மற்றவர்களைப் போல தான்  நடக்க வேண்டும் என்று விசும்பில் பதிவிட்டு, இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் எழுந்து நடக்கக் கற்றுவிடுகிறது. இவ்வாறாக, குழந்தை எழுந்து நடக்கும் வரையிலான முயற்சிகளின் ஒவ்வொரு நிலையை வைத்தே 

உடற்பயிற்சிக் கலையான ஓகக் கலையைக் கட்டமைத்தனர் தமிழ் முன்னோர்.

ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான், தன் ஐந்து அகவைக்குள், தன் தாய்மொழியை, தன் எண்ணமொழியாக, முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை, தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து, அதைத் தனக்கான தலையெழுத்தாக விசும்பில் எழுதிவிட்டு சாதிக்கிறது. 

ஆனால், ஐந்து அகவைக்கு முன்பாகவே, குழந்தைகளின் விருப்பம் இல்லாமலேயே, பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை, அந்தக் குழந்தையின் மீதாக திணிக்கும் முகமாக, மழலையர்ப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைக் கையளிக்கின்றார்கள். நீங்கள், உங்கள் தலையெழுத்தை யாரோ எழுதுவதாக நம்புவதைப் போல, அந்தக்குழந்தையும் தன்னுடைய தலையெழுத்தை பெற்றோர், ஆசிரியர், சுற்றம், நட்பு, உங்களால் அடையாளம் காட்டப்படுகிற தெய்வம் என்று யார்யாரோ, தம்முடைய தலையெழுத்தை எழுதுகின்றனர் என்ற முடிவுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பிழைப்பு நடத்தத் தொடங்கி விடுகிறது. 

நாம்- விசும்பு என்கிற கடவுளிடம், எது கேட்டாலும் கிடைக்கும். கடவுள் நன்மைதீமை என்று பாராமல் கொடுக்கும், என்பதாக தமிழ்முன்னோர் நிறுவிய, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிற தமிழர் மந்திரச் செய்தியை மறந்து விட்டு, தனக்கான நன்மையைப் பிறர் தரவில்லையே என்றும், மற்றவர்கள் தீமையையே தருகிறார்கள் என்றும் புலம்பி, அந்தப் புலம்பலையே தன்னுடைய தலையெழுத்தாக வடிவமைக்கத் தொடங்கி, அதையே திரும்பப் பெறுகின்றன. இதை மாற்றியமைத்து, நமது குழந்தைகளின் தலையெழுத்தை அவர்களே 

தொடர்ந்து எழுதிக் கொள்ளும் முகமாகவே அவர்களை முன்னெடுக்கவும், நாம் நமது புலம்பல்களை விட்டொழித்து நமக்கு என்ன தேவை என்பதை நேரடியாக விசும்பில் பதிவிட்டு நமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ளவும், இந்த மந்திரம் உங்களுக்கு உதவிட வேண்டும் என்பதற்கானது தமிழ்முன்னோர் முன்னெடுத்த ஐந்தாவது முன்னேற்றக் கலையான மந்திரம்.

நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம். நம்முடைய தலையெழுத்தை, நாம் ஒப்புக்கொடுக்காமல் யாரும் மாற்றி எழுத முடியாது என்று தெரிவிப்பதற்கானது அடுத்துவரும் நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது என்கிற கட்டுரை. 

இந்தக் கட்டுரை நான் எழுதியுள்ள மந்திரம் நூலின் முதலாவது கட்டுரையாகும். 

மந்திரம் நூல் குறித்த ஆசிரியர் உரையைப்படித்துப் பாருங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு, மந்திரம் நூல் தேவைக்கு:

புத்தகவிலை ரூ380 அஞ்சல் செலவு ரூ30 மொத்தம் ரூ. 410ஐ 9500612859 செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே அல்லது போன்பே அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பலாம்.


ஆசிரியர்உரை:
உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம்.

இயற்கையின் அனைத்திலும், மறைந்து பொதிந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்களை குறிக்க நான்மறை என்கிற தலைப்பை உருவாக்கியிருந்தனர், தமிழ்முன்னோர்.
அந்த நான்மறைகளும், வெளியில் இயங்கி, வெளிக்கு ஒரு இயக்கம் கொடுத்து, வெளியை விண்வெளி ஆக்குவதும், விண்வெளி- நான்மறைகளிடம் பெற்ற இயக்கவகைக்கு, நான்மறைகளை முயக்கம்போது இயக்கமற்ற வெளியும் முயக்க ஆற்றல் பெற்ற விசும்பு ஆகிவிடுவதால், நான்மறைகளோடு- விசும்பு நிலை எய்திய வெளியும் ஒரு ஆற்றல் ஆகிறது. நிலம் நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்தையும் குறிக்க, ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த தலைப்பை உருவாக்கினர் தமிழ்முன்னோர். ஆகவே, தமிழ்முன்னோர் கண்டறிந்து நிறுவிய முதன்மை திரங்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் ஐந்து ஆகும்.

இந்த ஐந்திரங்களை விரிவாக ஆயும் மொழியான தமிழுக்கு, கால அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவற்றுள், முதலாவது முகிழ்த்தது நாடகத்தமிழ். இரண்டாவது முகிழ்த்தது இசைத்தமிழ். மூன்றாவது முகிழ்த்தது இயற்றமிழ்.
இயற்றமிழில், நிலம், நீர், தீ, காற்று என்கிற சொந்த இயக்கம் உடைய நான்மறைகளைப் பற்றி ஆய்கிற கல்வியை, இயல்அறிவு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். இயல்அறிவு என்பதற்கு நேரான ஆங்கிலச்சொல் சயின்ஸ் ஆகும். 
இயற்றமிழில், விசும்பு என்கிற சொந்த இயக்கம் இல்லாத, நிலம், நீர், தீ, காற்றுக்குக் கடந்தும், உள்ளும் அமைந்து, அவைகளின் இயக்கத்திற்கு அவைகளை முயக்குவதைப் பற்றி ஆய்கிற கல்வியை, இயல்கணக்கு என்று நிறுவினர் தமிழ்முன்னோர். இயல்கணக்கு என்கிற சொல்லில், தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில், தலைப்பையோ, கல்வியையோ, ஆய்வையோ, உலகில் எந்த இனத்தினரோ, மொழியினரோ இன்றுவரை கொண்டிருக்கஇல்லை.
 
அந்த இயல்கணக்கில் 1.காப்பியம் 2.இலக்கியம் 3.நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் என்கிற ஐந்து துறைகள் அல்லது கலைகள் உண்டு. அவற்றுள் மந்திரம் என்கிற கலையை மட்டும் தெளிவுபடுத்துகிற நோக்கத்திற்கானது இந்த நூல்.

1. தமிழ்முன்னோர் நிறுவிய முதலாவது முன்னேற்றக்கலை காப்பியம்.
எழுத்து, சொல் என்று மொழிக்கும், பொருள் என்று வாழ்க்கைக்கும் வகுத்த காப்பு என்கிற அடிப்படையைக் கொண்டது காப்பியம்.

2 தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை இலக்கியம்.
அறம் செய விரும்பு என்று ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தும் அடிப்படையைக் கொண்டது இலக்கியம்

3. தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலை சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம்.
காலம் பொன் போன்றது என்று வலியுறுத்தும் அடிப்படைக்கானது நிமித்தகம்.

4. தமிழ்முன்னோர் நிறுவிய நான்காவது முன்னேற்றக்கலை கணியம்.
எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது என்கிற கண்டுபிடிப்பின் அடிப்படையாக உருவாக்கப்பட்ட கலை, கணியம்.
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கிற மந்திரச் செய்தியை நமக்கு உணர்த்திச் சென்ற பூங்குன்றனாரைக் கணியன் என்கிற அடைமொழியோடு கொண்டாடுகிற நாம், அந்தக் கணியத்தை மறந்தே போனோம். அந்தக் கணியத்தை முழுமையாக மீட்டு நிறுவும் முயற்சியில் பல கட்டுரைகளையும் சில நூல்களையும் நான் தொடர்ந்து எழுதி, பதிப்பிட்டு வருகிறேன்.

5. தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம்.
இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற கண்டு பிடிப்பின் அடிப்படையாக, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட ஐந்தாவது முன்னேற்றக்கலையும், நிறைவுக் கலையும் ஆகும் மந்திரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

032. எளிதாகக் கிடைத்துவிடும் மாற்றமும் முன்னேற்றமும்! நம்முடைய வாழ்க்கை பற்றி நாம் கொண்டிருக்கிற கணிப்பை மாற்றிக் கொண்டாலே

008. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே