இடுகைகள்

எளிதாகக் கிடைத்துவிடும் மாற்றமும் முன்னேற்றமும்! நம்முடைய வாழ்க்கை பற்றி நாம் கொண்டிருக்கிற கணிப்பை மாற்றிக் கொண்டாலே

படம்
1. நான் 27 அகவை இளைஞன், எனக்கு இரவில் தூக்கம் வராமல் மனம் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை பற்றி தேவையில்லாத நினைவுகளால் என்னை தூங்க விடாமல் செய்கிறது. இந்த எண்ணத்தைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? 2. இறப்பை நினைத்து எப்போதும் அச்சமாக இருக்கிறது. பேருந்தில் காரில் இப்படி பயணம் செய்யும் போதும் ஏதாவது ஆகுமோ என்று தோன்றுகிறது. வீட்டுக்குள்ளே அஞ்சி வாழ்கிறேன். இந்த அச்சத்தை எப்படி போக்குவது? 3. நான் ஒரு உள்முக சிந்தனையாளர். ஒரு நிமிடத்திற்கு மேல் பேசினாலோ அல்லது வாசித்தாலோ சோர்வு ஏற்பட்டு தூக்க நிலைக்கு செல்கிறேன். இயல்அறிவு (சயின்ஸ்) பாடான காரணம் மற்றும் தீர்வை கூற முடியுமா? 4. நான் ஒரு ஆணாக, ஒரு பெண்ணின் திமிருக்கு முன்னாடி என்னால் ஒன்றும் பேச (செய்ய) முடியவில்லை, அவளைப் பார்க்கும் பொழுது ஒரு வித அச்சம் என்னை பற்றி கொள்கிறது. அவளிடம் நான் ஒரு அடிமை போல் இருக்கிறேன், இதை எப்படி மாற்ற? 5. கொரோனா வருவதை எந்த சோதிடரும் கணிக்கவில்லை வந்த பின்பு எந்தத் தெய்வமும் மனிதனை இறப்பில் இருந்து காக்கவில்லை அப்போது எங்கே அந்தத் தெய்வங்கள்? எதற்காக சோதிடம்? நான் கேள்வித்தளத்தில் ஐந்து மணித்துளிகளுக்குள்

அழுது அடம்பிடிக்கிற குழந்தைகள் கற்றுத்தரும் மந்திரம்

படம்
நம்முடைய குழந்தைகள் அழுது அடம்பிடிப்பது, நம்மூலமாக தங்கள் கேட்புகளைக் கடவுளிடம் நிறைவேற்றிக் கொள்வதற்கான மந்திரச் செயல்பாடே என்கிறது, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட இயல்கணக்கு, என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.  தமிழ் முன்னோர் இயற்கையிடம் இருந்தும் தம் குழந்தைகளிடம் இருந்தும் நிறையக் கற்றனர். அவைகளை இயற்றமிழ் என்ற தலைப்பில் நிறுவியுள்ளனர். இயற்றமிழ் இரண்டு உட்தலைப்புகளைக் கொண்டது. ஒன்று இயல்அறிவு மற்றொன்று இயல்கணக்கு. இயல் உடையது இயற்கை. இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும் இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது. இயல்அறிவு என்பது இயற்கையின் கோட்பாட்டையும் நடைமுறையையும் அறிதல் ஆகும். இதை ஆங்கிலம் சயின்ஸ் என்கிறது. ஆங்கிலம் சொல்லுகிற சயின்ஸ் நம்மிடம் இயல்அறிவாக பன்னெடுங்காலமாக புழக்கத்தில் இருந்ததை கரிகாலன் கட்டுவித்த கல்லணை நின்று தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆக சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல் இயல்அறிவு ஆகும். ஐரோப்பியச் சார்பில் இயங்கும் நம் கல்வியாளர்கள் இன்று ஐரோப்பிய சயின்சை மலைத்து அதை அறிவியல் என்று தமிழ்ப்படுத்துகின்றனர். இது பிழையான முன்னெடுப்பு ஆகும்

கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே

படம்
கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுள் என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை. கடவுளுக்கு நாம் கொடுக்கிற இயக்கத்திற்கு, எதிர்இயக்கமாக நம்மை முயக்குவது மட்டுமே கடவுள். மாறாக, கடவுள் சொந்த இயக்கமோ எல்லையோ கொண்டது அல்ல என்று, தமிழ்முன்னோர் கடவுளில் பொதித்துள்ள பொருளை விளக்குவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இயற்கையில் எல்லாவற்றுக்கும் வெளியில் அமைந்தது என்கிற பொருளில் 'வெளி' என்றொரு சொல்லை நிறுவினர் தமிழ்முன்னோர். நான் தனியானவன் அல்லன்.  நான் ஒரு கூட்டியக்கம். நான் பல உறுப்புகளால் ஆனவன். என் எந்த உறுப்பும் தனியானது அல்ல. ஒவ்வொரு உறுப்பும் இழையங்;களால் (திசு) ஆனது. இழையம் எதுவும் தனியானது அல்ல. ஒவ்வொரு இழையமும் பல கலங்களால் (செல்) ஆனது. கலம் எதுவும் தனியானது அல்ல. ஒவ்வொரு கலமும் பல நுட்பப் பொருட்களைக் கொண்டுள்ளன. இவைகள் அனைத்திற்கும், வெளி- வெளியாக மட்டும் இல்லாமல், உள்ளாகவும் வெளி- இருக்கும். தமிழ்முன்னோர் நிறுவும் மிக மிக நுட்பமானதும் முதலாவதும் ஆனவை தனிஒன்றுகள் அந்தத் தனி ஒன்றுகளில் மட்டுமே வெளி- வெளியாக மட்டுமே அமையும்.

உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.

படம்
  நம் பழந்தமிழர், விசும்பு என்று அழைத்த, பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத் கட்டுரையும்.   மதம் சார்ந்தவர்கள்:- உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள்.  இயல்அறிவு (சயின்ஸ்) சார்ந்தவர்கள்:- பெருவெடி- சிதறிய கோள்கள், விண்மீன்கள்- ஞாயிறு; ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு- ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள்.  மார்க்சிய வாதிகள்:-படைப்பாளி என்பது ஒரு கருத்து என்றும், உலகம் படைக்கப் பட்டதாக கூறுவது கருத்து முதல்வாதம் என்றும், மதங்கள் கூறும் படைப்பாளி இல்லவேயில்லை யென்றும், பொருளே முதல் என்றும் பொருளிலிருந்தே கருத்து என்றும், மனிதனுடைய கையே மனிதனுக்கு கருத்து தோன்றுவதற்கான அடிப்படை யென்றும் கூறி வருகின்றார்கள்.  தமிழ்முன்னோர்:- ஐந்திரத்தில் உள்ளதே மனிதனில், மனிதனில் உள்ளதே ஐந்திரத்தில் என்றார்கள். தனிமங்களி

பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்

படம்
தமிழ் (தாய்மொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தமிழ்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு' சொந்தக்காரர்களாகக் கடவுளால் பட்டியல் இடப்படுகின்றீர்கள். என்பதான, என்பட்டறிவில் கிடைத்த இந்தச் செய்தியை, தமிழ்மக்களுக்குப் பகிர்ந்து, விழிப்புணர்வு ஊட்டும் முயற்சிகானது இந்தக் கட்டுரை. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அதைப் புரிந்து கொண்டு இயங்கியிருந்த தமிழினம், உலகுக்கு ஆசிரியராய் அமைந்திருந்த காலம் உண்டு.   உலகம் இன்றும் அடிப்படையாய் கொண்டிருக்கிற அறிவின் பெரும்பகுதி அந்தப் பெருமைக்குரிய காலத்தில், உலகின் முதல் கடலோடியாக விளங்கிய தமிழ்மக்கள், கடற்கரை உள்ள நாடுகளுக்கெல்லாம் கப்பல் செலுத்தி முத்து, மயில்தோகை, சுவைகூட்டும் உணவுப் பொருட்கள், மெல்லிய துணிவகைகள் என்பதான வணிகப்பொருட்களோடு வழங்கியிருந்த வானியல், எண்ணியல், இயல் கணிப்பு கண்டுபிடிப்புகள் தாம். அக்காலத்து தமிழ்மக்கள் கண்டறிந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதியம், வியாழம், வெள்ளி, கருக்கரிவாள் என்கிற கோள்களும், அந்த கோள் பெயர்களைப் கிழமையாக்கிய பாட்டையே மொழிபெயர்த்து இன்றுவரை பின்தொ

கடவுள் சாமி என்பன- பொய் என்று நினைக்கிறேன். என் எண்ணம் சரியா? தவறா?

படம்
வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த மேற்கண்ட வினாவிற்கு- 1.கடவுள் 2.சாமி என்கிற இரண்டு தலைப்பையும் ஒன்றெனக் காட்ட முயல்கிற உலகின் போக்கு உங்களுக்கு இந்த எண்ணத்தை உருவாக்குகிறது. உங்கள் எண்ணம் சரிதான். ஆனால், இரண்டும் என்னென்ன? என்று தமிழ்முன்னோர் நிறுவிய அடிப்படையில் உங்கள் எண்ணம் நூறு விழுக்காடு தவறு என்று விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. வெளி என்கிற ஆற்றல் மூலத்திற்கு, கடந்தும் உள்ளும் இருத்தல் என்கிற, அது கொண்டிருக்கிற இயல்பில் அதற்கு தமிழ்முன்னோர் சூட்டிய பெயர் கடவுள். கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை. நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல் மூலங்களுக்கு இறைந்து கிடப்பன என்கிற அது கொண்டிருக்கிற இயல்பில் அதற்கு தமிழ்முன்னோர் சூட்டிய பெயர் இறை. இறை என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. இறை என்கிற தமிழ்ச்சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை. இயற்கையின் ஒவ்வொன்றையும், இந்த ஐந்து ஆற்றல் மூலங்களும் தொய்ந்தவை என்கிற இயல்பில் அவை ஒவ்வொன்றுக்கும், த

நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு

படம்
கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது இறை கூறு என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர் என்று பேசுவதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரம், அது இறை என்றும் பேசப்படுகிறது.  கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு.  கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும்.  கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய ஒற்றைத் திரம் ஆகும். இறை- நிலம், நீர், தீ,